1951.10.16 யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த நாடகக் கலைஞர்,பாடகி,இசைக் கலைஞர்.
இவரது
தந்தை ஏரம்பு செல்லையா;
தாய் தங்கச்சியம்மா.
இவர் தேவரையாளி இந்துக் கல்லூரியிலும்,
நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றுள்ளார். கல்வி கற்ற காலங்களில் எந்த போட்டிக்கு சென்றாலும் 1ஆம் இடத்தையே பெற்று தன் திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
மேலும் ஆர்மோனியத்தை ஆரம்பத்தில் கிருஷ்ணபிள்ளை அவர்களிடமும் பின்னர் மு.பொன்னையா அவர்களிடமும் கற்று 1966ஆம் ஆண்டு அல்வாய் சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் அரங்கேற்றியுள்ளார்.
இதன் சிறப்பம்சம் என்னவெனில் இவரே பாடி ஆர்மோனியத்தையும் இவரே வாசித்து தனது அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
தம்பிஐயா, கலாமணி, சிவபாதம்கிளி, பர்வதாமணி, சாரதாவதி விஜயநாதன், கீதாமணி கமலேந்திரன் போன்ற நாடக கலைஞர்களுடன் இணைந்து இவர் பல நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.
மேலும் 1965களில் பல அரசியல் மேடைகளில் இவர் தனது ஆற்றலை வெளிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது பிள்ளைகள் ரத்னாங்கி, சரசாங்கி ஆகியவர்கள் நாடகங்களிலும் இசைக் கச்சேரிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இவருடைய மகன் சந்திரமேனன் மிருதங்க கலைஞர் ஆவார்…
ஆழ்மனத் துயருடன் நாம்…..
இறுதிக்கிரியைகள் 03.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று,உடலம் தகனக்கிரியைக்காக
தாயகத்தின் யாழ்ப்பாணம்,நெல்லியடி,
அல்வாய் பங்குவேம்படி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்பதை
ஆழ்மனத் துயரத்துடன் தெரியப்படுத்துகின்றோம்.
தகவல்:- சி.சந்திரமேனன்(மகன்) +94750834647









