Rapperswil-Jona SG பகுதியில் கத்தி முனையில் சிறுவர்களிடம் கொள்ளை.! சனிக்கிழமை (ஜனவரி 28, 2023), மாலை 6:00 மணிக்குப் பிறகு, இரண்டு 13 வயது இளைஞர்கள் சிலரிடம் ஆயுதத்துடன் வந்த சிலரால் Mühlegasse பகுதியில் வைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது :-
Rapperswil-Jona SG பகுதியில் கத்தி முனையில் சிறுவர்களிடம் கொள்ளை.!
அடையாளம் தெரியாத மூன்று இளம் குற்றவாளிகள் 13 வயதுடைய இரு சிறுவர்களை Mühlegasse பகுதியில் வைத்து கத்தியை காட்டி மிரட்டி ஆடை மற்றும் பணத்தை கொடுக்குமாறு மிரட்டியுள்ளார்கள்.
கத்தி மிரட்டலின் கீழ், 13 வயது சிறுவன் ஒருவன் தனது காலணிகளையும் , ஜாக்கெட்டையும், பணத்தையும் குற்றவாளிகளிடம் ஒப்படைக்க வேண்டியிருந்தது. சிறுவர்களிடம் இருந்து உடமைகள் மற்றும் சிறிய அளவிலான பணத்தை கொள்ளையடித்த குற்றவாளிகள் பின்னர் Fischmarktplatz இன் பொதுவான திசை வழியாக வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தின் போது 13 வயதுடைய சிறுவர்களுக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனினும் குறித்த சிறுவர்களை சென்ட்காலன் கன்டோன் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் குறித்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக கருதப்படும் 3 குற்றவாளிகளையும் போலீசார் தேடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
[yotuwp type=”videos” id=”C6G7sCQ8lZE” ]
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.