கெர்செர்ஸ் பேருந்து தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரிபூர் அரசு இரங்கல்
சுவிட்சர்லாந்தின் கெர்செர்ஸ் (Kerzers) நகரில் பொது போக்குவரத்து பேருந்தில் ஏற்பட்ட துயரமான தீ விபத்துக்குப் பிறகு, பிரிபூர் கன்டோன் (Fribourg) மாநில அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
ப்ரீபோர்க் மாநில அரசுக் கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், 2026 மார்ச் 10 ஆம் தேதி மாலை சுமார் 6.25 மணியளவில் கெர்செர்ஸ் நகரில் நிகழ்ந்த இந்த துயரமான தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடனும் உறவினர்களுடனும் தாங்கள் ஆழ்ந்த ஒற்றுமையையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள மற்ற அனைவரிடமும் தங்களது எண்ணங்கள் இருப்பதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து சுவிட்சர்லாந்து முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது சம்பவத்தின் காரணங்களை கண்டறிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து தீ விபத்தில் பலர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்ததாக அதிகாரிகள் முன்பு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான மிகவும் கடினமான சூழ்நிலையில், மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவசர சேவைப் பணியாளர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் இந்த அவசர நிலையை சமாளிக்க விரைந்து செயல்பட்ட அனைத்து பணியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்முறை செயல்பாட்டை ப்ரீபோர்க் மாநில அரசு பாராட்டியுள்ளது.
சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
Staatskanzlei Freiburg