லௌசானில் நிரம்பி வழியும் குப்பைகள் : நகராட்சி எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
சுவிட்சர்லாந்தின் லௌசான் நகரம் குப்பைகளால் நிரம்பி வழிகிறது. ஆண்டுதோறும், சுமார் 1,200 டன் கழிவுகள் நகரின் தெருக்கள் மற்றும் பூங்காக்களை அசுத்தப்படுத்துகின்றன. TakeAway உணவு பொதிகள் மற்றும் சிகரெட் துண்டுகள் இதில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன, அதேநேரம், Bubulcum, விளம்பரத் துண்டு பிரசுரங்கள், ஆகியவையும் நகரின் தோற்றத்தை மேலும் மோசமாக்குகின்றன.
இந்தக் குப்பைகளை அகற்றுவதற்கு லௌசான் நகராட்சி ஆண்டுதோறும் 11.3 மில்லியன் சுவிஸ் பிராங் செலவிடுகிறது, மேலும் ஆயிரக்கணக்கான மணிநேர உழைப்பு இதற்காக செலவாகிறது. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள, லௌசான் நகரம் ஒரு புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. “உங்கள் குப்பையால் உங்களை அசுத்தப்படுத்திக் கொள்ளாதீர்கள், குப்பைத் தொட்டியில் போடுங்கள்!” என்று வலியுறுத்தும் வாசகங்களுடன் கூடிய சுவரொட்டிகள் நகரெங்கும் வைக்கப்பட்டுள்ளன.

வரவிருக்கும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில், பிளேஸ் செயிண்ட்-பிரான்சுவா (Place St-François) பகுதியில் ஒரு வேடிக்கையான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் இந்த பிரச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவர். மேலும், நகரில் 1,000-க்கும் மேற்பட்ட குப்பைத் தொட்டிகள், இதில் சூரிய சக்தியால் இயங்கும் solar-powered compactorsஅடங்கும், இந்தப் பிரச்சினையை கட்டுப்படுத்த தயாராக உள்ளன.
இந்த பிரச்சாரம், பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதையும், குப்பைகளை சரியான முறையில் அகற்றுவதற்கு ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. “நகரத்தை சுத்தமாக வைத்திருப்பது நம் அனைவரின் பொறுப்பு,” என லௌசான் நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த முயற்சி வெற்றி பெற்றால், லோசானின் தெருக்கள் மற்றும் பூங்காக்கள் மீண்டும் தூய்மையான தோற்றத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
© WRS