செயற்கை நுண்ணறிவு நிபுணர்கள் எண்ணிக்கையில் சுவிட்சர்லாந்து உலகில் முதல் இடம்
செயற்கை நுண்ணறிவு துறையில் நிபுணர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அடர்த்தி அடிப்படையில் சுவிட்சர்லாந்து உலகளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் மனித மையப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு நிறுவனம் (HAI) வெளியிட்ட 2026 ஆம் ஆண்டுக்கான AI Index அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் ஒவ்வொரு 100,000 மக்களுக்கும் 110.5 செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் டெவலப்பர்கள் பதிவாகியுள்ளனர். இதன் மூலம், 109.5 நிபுணர்களுடன் சிங்கப்பூரை முந்தி, இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, திறமை அடர்த்தி மற்றும் புதுமை ஆகிய துறைகளில் சுவிட்சர்லாந்து உலகின் முன்னணி மையங்களில் ஒன்றாக நீண்ட காலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தொடர்ச்சியாக 15 ஆண்டுகளாக உலகின் மிக அதிக புதுமை கொண்ட நாடாகவும் சுவிட்சர்லாந்து தேர்வாகி வருகிறது.
உயர் தரக் கல்வி அமைப்பு, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்பு, மேலும் ஆராய்ச்சிக்கு வழங்கப்படும் ஆதரவு ஆகியவை இந்த முன்னேற்றத்திற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு துறையிலும் சுவிட்சர்லாந்து தனது முன்னிலை நிலையை மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது.