பெர்னில் தவறான ஆயுத முறைப்பாடு : நபருக்கு அபராதம்.!!!
2020 ஆம் ஆண்டு செப்டம்பரில், சுவிட்சர்லாந்தின் (BERN) பெர்ன் மாநிலம் வாஸன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆயுத சட்டங்களை மீறியதாக சந்தேகத்தின் பேரில் பெர்ன் கன்டோன் போலீசார் சோதனை நடத்தினர். சோதனைக்குப் பின், வீட்டில் இருந்த அனைத்து துப்பாக்கிகளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், அந்த வீட்டின் உரிமையாளர் இரண்டு கூடுதல் ஆயுதங்களையும் தானாகவே அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை மீண்டும் வழங்கும் நடவடிக்கையின் போது, அந்த ஆயுத உரிமையாளர், தன்னிடம் இருந்த இரண்டு துப்பாக்கிகள் காணவில்லை என புகார் செய்தார். அதில் ஒரு துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மற்றொன்று காணவில்லை என்று தெரிவித்தார். இதனால் பெர்ன் மாநில தலைமை நீதிமன்றம், வழக்கை மீண்டும் பரிசீலிக்க மாநில அரசு வழக்குரைஞரிடம் அனுப்பியது.

ஆனால், 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் அந்த ஆயுத உரிமையாளர் தன் தவறை ஒப்புக்கொண்டார். அவர் புகாரில் குறிப்பிட்ட துப்பாக்கி உண்மையில் அவரிடம் இருப்பதேயில்லை. இது வெறும் குழப்பத்தால் ஏற்பட்ட தவறாகும். இதனால், அவர்மீது நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயன்றதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. தீர்ப்பின்படி, அவருக்கு ஒரு நிபந்தனைக்குட்பட்ட நிதி அபராதம் மற்றும் கட்டாயமான அபராதத் தொகையும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு, அதிகாரிகளை தவறாக குற்றம் சாட்டுவது, எப்படி ஒருவருக்கு சட்டபூர்வமான பின்விளைவுகளை உருவாக்கக்கூடும் என்பதற்கான முக்கியமான எடுத்துக்காட்டு ஆகும்.