சூரிச் விமான நிலையத்தில் தானியங்கி வாகனங்கள் மூலம் சோதனை
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் தானியங்கி வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் சிறந்த விமான நிலைய சேவை நிறுவனங்களில் ஒன்றாக ஸ்விஸ்போர்ட் நிறுவனம் காணப்படுகின்றது.
ஸ்விஸ்போர்ட் நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த Aurrigo நிறுவனத்துடன் இணைந்து இந்த சோதனைகளை முன்னெடுத்துள்ளது.
புதிய முயற்சியின் முதல் கட்டத்தில், டிஜிட்டல் சிமுலேஷன் தளமும், முழுமையாக தானாக இயங்கும் மின்சார வாகனமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என ஸ்விஸ்போர்ட் தெரிவித்தது.

இரண்டாம் கட்டத்தில், Aurrigo நிறுவனத்தின் ரோபோ வாகனங்களை நேரடி சோதனையில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சோதனையில் பயன்படுத்தப்படும் வாகனமான ‘Auto-DollyTug’ என்பது, விமானப்பயண துறையில் பயன்படும் மட்டப்பட்ட (ULD) கன்டெய்னர்களை தானாக ஏற்றும் மற்றும் இறக்கும் திறனுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், ஸ்விஸ்போர்ட் மற்றும் Aurrigo நிறுவனங்கள் இதனை மற்ற விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன.
“தானியங்கி தொழில்நுட்பங்களை எங்கள் சேவையில் இணைப்பதன் மூலம், விமான தரை சேவையை புதுமையாக வடிவமைக்கின்றோம் டிக ஸ்விஸ்போர்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
(c) airsideint.com