ஜெனிவாவில், 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் இப்போது பொதுப் போக்குவரத்தில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும்இ ஏதேனும் ஒரு பயிற்சியில் இருப்பவர்களுக்கு அல்லது குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த நன்மை கிடைக்கும்.
இந்தச் சலுகைக்கு யாராவது தகுதி பெறுகிறார்களா என்பதை அவர்களின் சூழ்நிலையின் அடிப்படையில் கன்டோன் தீர்மானிக்கும்.

கூடுதலாக, வயதானவர்கள் அதாவது ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மாலை நேரத்தில் பொதுப் போக்குவரத்துக் கட்டணத்தில் 50மூ தள்ளுபடியை அனுபவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடவடிக்கையானது குறிப்பிட்ட குழுக்களுக்கு போக்குவரத்தை மிகவும் மலிவாக மாற்றுவதையும் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.