சுவிட்சர்லாந்தில் பருவகால காய்ச்சல் அதிகரித்து வருவதாக தகவல் – பருவகால காய்ச்சல் தொடர்பான வழக்குகள் குறுகிய காலத்தில் இரட்டிப்பாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் COVID-19 அலையின் உச்சம் முடிந்துவிட்டதாகத் தெரிகிறது.
இருப்பினும், காய்ச்சலை விட COVID-19 இன்னும் பரவலாக உள்ளது என்று ஃபெடரல் ஆபிஸ் ஆஃப் பப்ளிக் ஹெல்த் (BAG) தெரிவித்துள்ளது.
ஃபெடரல் ஆபிஸ் ஆஃப் பப்ளிக் ஹெல்த் அறிக்கையின்படி, காய்ச்சல் சீசன் டிசம்பர் 9 அளவில் தொடங்கியது. ஒரு வாரத்திற்குள், சென்டினெல்லா கண்காணிப்பு அமைப்பில் பதிவான காய்ச்சல் வழக்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது.
டிசம்பர் 9 மற்றும் டிசம்பர் 15 க்கு இடையில், 100,000 பேருக்கு 5.03 வீத காய்ச்சல் வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.