குழுக்களுக்கு இடையே கத்திக்குத்து மோதல் : ஒருவர் கைது துர்காவ் கன்டோனில் சனிக்கிழமை மாலை Frauenfeld இல் ஏற்பட்ட மோதலில் ஒருவர் மிதமான காயம் அடைந்தார். குறித்த சம்பவம் தொடர்பில் 18 வயது ஆப்கானிஸ்தான் பிரஜை குற்றவாளி என இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சனிக்கிழமை மாலை பள்ளி வளாகத்தில் பலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக துர்காவ் கன்டோனல் போலீசார் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

விசாரணையில் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனே தற்போது கைது செய்யப்பட்டார். குற்றத்திற்கான காரணம் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. (sda)