ஜெனிவா கன்டோனில் பொது இடங்களில் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் மேஜைப் பாத்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2, 2024 முதல், அங்கீகாரத்திற்கு உட்பட்ட பொது நிகழ்வுகளை அமைப்பாளர்கள், உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்காக மீண்டும் பயன்படுத்தக்கூடிய அனைத்து வகையான பாத்திரங்களையும் மாற்ற வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கான காரணங்கள் என்னவென்றால், ஒருமுறை பயன்படுத்தும் பாத்திரங்கள் அதிக கழிவுகளை உருவாக்குகிறது. மேலும் அதை அகற்றுவதற்கு கூடுதல் மனித மற்றும் நிதி ஆதாரங்கள் தூய்மைப்படுத்தலுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
மேலும் ‘நீர்வழிகள் மற்றும் காற்றினால் எடுத்துச் செல்லப்படும் இந்தக் கழிவுகள் இயற்கைச் சூழலைப் அதிகம் பாதிக்கின்றன’ என்று ஜெனீவா அதிகாரிகள் மேலும் கூறினார்.