பாஸல் பகுதியில் ஏராளமான ரயில்கள் ரத்து – வெளியான அறிவிப்பு சுவிஸ் பாஸல் பகுதியில் ஏராளமான ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு கால அட்டவணைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல், பாசல் பகுதியில் உள்ள பயணிகள் பலர் ரயில் ரத்து மற்றும் பிற இடையூறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தேசிய ரயில்வே நிறுவனமான எஸ்பிபி தெரிவித்துள்ளது.
காரணம், ஆர்காவ்வில் உள்ள Basel மற்றும் Olten, Rheinfelden மற்றும் Frick இடையேயான பாதை வலையமைப்பின் விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல் வேலைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் Basel பகுதியில் உள்ள Aesch மற்றும் Laufen ஆகிய இடங்களிலும் பாதை வலையமைப்பின் விரிவாக்கம் இடம்பெறவுள்ளது. இப்பகுதியில் 2024 இறுதி வரை பணிகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.