நூதனமுறையில் போலீசாரை ஏமாற்ற நினைத்தவருக்கு ஏற்பட்ட சிக்கல்.! சுவிட்சர்லாந்தில் போலீசாரை ஏமாற்ற நினைத்த வாகன ஓட்டி ஒருவர் வசமாக சிக்கியுள்ளார். பொதுவாக சுவிட்சர்லாந்தில் அவுட்டோபானில் பயணிக்கும் வாகனங்கள் அவுட்டோபான் விக்னெட் ஒட்டியிருக்க வேண்டும்.
ஆனால் குறித்த நபர் அந்த விக்னெட்டை ஒரு டேப் மூலம் ஒட்டியிருந்தமையினால் போலீசாரால் அபராதத்திற்கு உள்ளானார். காரணம் அதை இலகுவாக அகற்றி வேறு வாகனங்களுக்கு பயன்படுத்த முடியும்.
அப்படியொரு நடவடிக்கையின் நோக்கத்தோடு செயற்பட்டமைக்காகவே அவருக்கு 700 பிராங்குகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு தடவை விதிமுறையினை மீறினால் 1200 பிராங்குகள் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கப்பட்டுள்ளார். மேலும் குறித்த நபர் புதிய விக்னெட் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.