நான்கு போதைப்பொருள் வியாபாரிகளை கிராபண்டன் பொலிசாரால் கைது கிராபண்டன் கன்டோனல் போலீசார், CHUR பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்த நான்கு பேரை கைது செய்துள்ளனர். ஆண்கள் 19 மற்றும் 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் மற்றும் அல்பேனியாவிலிருந்து வந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கையின் போது மொத்தம் ஒரு கிலோகிராம் ஹெரோயின் மற்றும் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து அக்டோபர் இறுதிக்குள் கைதுகள் நடந்தன. முதலாவதாக, 21 வயதான வியாபாரி ஒருவர் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு, Felsberg இல் உள்ள அதிகாரிகள் 19 வயது வியாபாரியை கைது செய்தனர். அக்டோபரில் மேலும் கைதுகள் தொடர்ந்தன: 25 வயதான ஒருவர் மற்றும் 39 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 50,000 பிராங்குகளுக்கு மேல் பெறுமதியான 745 கிராம் ஹெரோயின் மற்றும் 315 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்றும் 7,760 பிராங்குகள் ரொக்கமாக இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட போதை பொருள கடத்தல் டீலர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர். அவர்களில் இருவர் ஏற்கனவே நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.