துர்காவ் கன்டோனில் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் உரிமையாளரின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
23 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தனது ஸ்பீட்மீட்டரில் மணிக்கு 163 கிலோமீட்டர் வேகத்தில் நகருக்கு வெளியே பிடிபட்டார்.
Quelle: Kantonspolizei Thurgau
ஆனால் அனுமதிக்கப்பட்ட வேகம் மணிக்கு 80 கிலோ மீற்றர்களாக இருந்துள்ளது. இதனை தொடர்ந்து இளைஞரின் ஓட்டுநர் உரிமம் சாலைப் போக்குவரத்து அலுவலகத்தின் கவனத்துக்கு சென்ற பின்னர் பறிமுதல் செய்யப்பட்டதாக துர்காவ் கன்டோனல் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தனர்.
குறித்த நபர் செப்டம்பர் நடுப்பகுதியிலும் இவ்வாறு நகரத்திற்கு வெளியே உள்ள சாலையில் அதி வேகமாக பயணித்துள்ளது விசாரணைகளின் போது தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.