ஜெனிவாவில் நேற்று மதியம் பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கான்டனின் தெற்கே, பிளான்-லெஸ்-ஓவேட்ஸ், பார்டோனெக்ஸ் மற்றும் லான்சி ஆகிய பகுதிகளில் மிக மோசமாக பாதிக்கப்பட்டன.
வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, சாலைகள் மூடப்பட்டன. டிரைஸ் நதி பல பகுதிகளில் அதன் கரைகளை உடைத்தது.
3,600 அழைப்புகளுடன் கிட்டத்தட்ட 400 சம்பவங்களுக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன. அழைப்புகள் இருந்தபோதிலும், சம்பவங்களில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
மேலும் குறித்த சீரற்ற காலநிலை காரணமாக அண்டை நாடான பிரான்சின் பகுதிகளும் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.