சொலுத்தூர்ன் இல் டிரக் மற்றும் கார் இடையே விபத்து – நான்கு பேர் காயம் திங்கட்கிழமை, நவம்பர் 11, 2024, மதியம் 1:15 மணியளவில் ஃப்ளூமெண்டல் அருகே சூரிச் திசையில் A1 நெடுஞ்சாலையில் ஒரு கார் மற்றும் டிரக் இடையே விபத்து ஏற்பட்டது.
Deitingen பகுதியில், 52 வயதுடைய ஓட்டுநர் ஒருவர் பாதையில் ஓட்டிக்கொண்டிருந்தபோது, அவர் திடீரென லாரியின் பின்புறம் மோதியுள்ளார்.. இதன் தாக்கத்தால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிரக் சறுக்கியது.
இரண்டு வாகனங்களும் மீண்டும் மோதி, இறுதியில் தடுப்புச்சுவரில் மோதியது, அது பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் லாரியில் இருந்த இருவர், காரில் இருந்த இருவர் என மொத்தம் நான்கு பேர் லேசான காயம் அடைந்தனர்.

அனைவரும் அவசர அம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
இந்த விபத்தால் வாகனங்களுக்கும், நெடுஞ்சாலைக்கும் பல்லாயிரக்கணக்கான பிராங்குகள் சேதம் ஏற்பட்டது. பல பொலிஸ் ரோந்துகளுக்கு மேலதிகமாக, இரண்டு ஆம்புலன்ஸ்கள், இரண்டு இழுவை சேவைகள் மற்றும்National Roads Northwestern Switzerland நிறுவனத்தின் ஊழியர்களும் கடமையில் இருந்தனர்.
விபத்தின் காரணமாக, சூரிச் நோக்கிய A1, விபத்து நடந்த பகுதியில் தற்காலிகமாக முழுமையாக மூடப்பட வேண்டியதாயிற்று. இதனால் போக்குவரத்து தாமதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(c)சோலோதூர்ன் கன்டோனல் போலீஸ்