செயற்கை நுண்ணறிவு (artificial intelligence) ஆபத்தானது என சுவிட்சர்லாந்து மக்கள் கருதுகின்றனர். அண்மையில் நாட்டு மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சமூகத்திற்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மேலும் வெளிநாட்டு இணைய வழி பிரச்சாரங்களின் மூலம் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
“Digital Radar Switzerland என்ற அறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஜெர்மனி மற்றும் பிரெஞ்சு மொழி பேசும் சுவிட்சர்லாந்து மக்களிடம் இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.