சூரிச் விமான நிலையத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தில் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோவிட் பெருந்தொற்று காலப்பகுதிக்கு முன்னர் நிலவிய அளவிற்கு தற்பொழுது விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சூரிச் விமான நிலையத்தில் அண்மையில் ஒரு லட்சம் பயணிகள் போக்குவரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட இடைவெளியின் பின்னர் இவ்வாறு கூடுதல் எண்ணிக்கையில் பயணிகள் பயணம் செய்ய தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் மட்டுமன்றி உலக அளவிலும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.