சுவிஸில் விமானப் பாதுகாப்பு சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
சுவிட்சர்லாந்தில் வணிக மற்றும் பொழுதுபோக்கு விமானப் பயணங்களில் பாதுகாப்பு சம்பவங்கள் 2023 ஐ விட 2024ல் 20% அதிகமாக பதிவு செய்யப்பட்டதாக ஃபெடரல் சிவில் ஏவியேஷன் அலுவலகம் (FOCA) வெளியிட்ட ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 12,500க்கும் மேற்பட்ட பாதுகாப்பு சம்பவங்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளன.
இது கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வரும் அதிகரிப்பை தொடர்கிறது.
- 32% அதிகரித்த ரன்வே சம்பவங்கள்
- 21% அதிக விமான தரையிறங்கும் கட்டுப்பாட்டு போது ஏற்பட்ட சேதங்கள்
- 40% அதிக GPS செயலிழப்புகள்
- 13% அதிக விலங்குகளுடன் நேர்ந்த மோதல் சம்பவங்கள்
- 8% அதிக சுமை ஏற்றும் தவறுகள்
- 20% அதிகமான வானில் ஏற்பட்ட நெருக்கமான மோதல் சந்தர்ப்பங்கள்
மேலும், கடந்த ஆண்டில் போலவே, ட்ரோன் மோதல்களும் இடம்பெற்றுள்ளன.
லேசர் தாக்குதல், மது அருந்திய பயணிகள், தாக்குதல் நடத்தும் பயணிகள், தவறான வார்த்தைகள் பயன்படுத்தும் பயணிகள் ஆகியவற்றில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
- வணிக விமானப் பயணத்தில் ஒரு மரணம்: 2024 டிசம்பர் 23ஆம் திகதி ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் அவசர தரையிறக்கம் செய்த ஏர்பஸ் A220 விமானத்தில், 23 வயதான சுவிஸ் விமான பணிப்பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.
- பொழுதுபோக்கு விமானப்பயணங்களில் மூன்று விபத்துகள் – இதில் மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
- ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் ஒரு விமானி உயிரிழந்தார், மற்றொரு விமானி கடுமையாக காயமடைந்துள்ளார்.

FOCA அலுவலகத்தின் கூற்றுப்படி, இந்த அதிகரிப்பு 2019 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்துவருகிறது. 2023ல் 10,000க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியிருந்தன, இது 2022 ஐ விட 24% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்து போன்ற விமானப் போக்குவரத்து மேம்பட்ட நாடுகளிலும் பாதுகாப்பு சவால்கள் அதிகரித்து வருவதைக் காட்டும் இத்தகவல்கள், எதிர்காலத்தில் விமான பாதுகாப்பு நடைமுறைகளைப் மீளாய்வு செய்யும் தேவை பெரிதாக இருப்பதை சுட்டிக்காட்டுகிறது.