சுவிஸில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகுபவருக்கு உதவ தவறினால் சிறை.!! சுவிட்சர்லாந்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவருக்கு உதவத் தவறியதை கிரிமினல் குற்றமாக மாற்றும் நாடாளுமன்ற முயற்சியைதேசிய கவுன்சில் ஏற்றுக்கொண்டுள்ளது.
பிரேரணையை சமர்ப்பித்த பாராளுமன்ற உறுப்பினர் தமரா ஃபுனிசியெல்லோ இதுபற்றி கூறுகையில், ‘தற்போது, மரண அபாயத்தில் உள்ள ஒருவருக்கு உதவாமல் இருப்பது தண்டனைக்குரியது.
அதேபோன்று அடுத்த அறையில் கற்பழிக்கப்படும் ஒருவருக்கு உதவாமல் இருப்பதும் தண்டனைக்குரியது என குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கைக்கு மாநில கவுன்சிலின் சட்ட விவகாரக் குழு ஒப்புதல் அளித்தால், இந்த அலட்சிய நடத்தைக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.