சுவிற்சர்லாந்தில் அதிக வெப்பம்.. காட்டுத்தீ பரவும் அபாயம்.!!
சுவிற்சர்லாந்தில் இம்முறை கோடை காலம் கடும் வெயில் நிறைந்த காலநிலையாக கடந்த ஒரு வாரமாக காணப்படுகிறது. இதனால் சூரிச் மற்றும் ஷாஃப்ஹவுசென் மண்டலங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அலுவலகத்தின் (FOEN) இணையதளம் தெரிவித்துள்ளது.
கடந்த 2 வாரங்களாக சுவிற்சர்லாந்தின் பல்வேறு மாகணங்களிலும் 30 பாகைக்கு அதிகளவான வெயில் காலநிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் உங்கள் பிரதேசங்களிலும் இடம்பெறும் நிகழ்வுகள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் தமிழில் படிக்க எமது இணையத்தளத்தை தினமும் பார்வையிடுங்கள்.
