சுவிட்சர்லாந்தில் 30 இடங்களில் திருடிய நபருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொண்டு நிறுவனங்களையும் விட்டுவைக்கவில்லை
சுவிட்சர்லாந்தின் பிரெஞ்சு மொழி பேசும் பகுதிகளில் 30 இடங்களில் திருடியதாக கருதப்படும் ஒருவர் ஜெனீவாவில் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
சர்வதேச அமைப்புகளான Organization for Migration, The Salvation Army முதலான இடங்களிலும் அந்த நபர் கொள்ளையடித்துள்ளார்.

சுமார் 133,000 சுவிஸ் ஃப்ராங்குகள் அளவுக்கு அவர் திருடியிருக்கலாம் என கருதப்படும் நிலையில், அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.