சுவிட்சர்லாந்தில் அதிவேகமாகச் சென்ற பிரித்தானியர்கள் சிக்கியுள்ளனர்.
ஜூன் மாதம்இ சூரிச் கன்டோனல் போலீசார் தங்கள் ஸ்போர்ட்ஸ் கார்களில் சுவிஸ் நெடுஞ்சாலையில் வேகமாகச் சென்ற நான்கு இங்கிலாந்து நாட்டவர்களின் கார்களை நிறுத்திஇ கைது செய்தனர்.
அவர்கள் சுவிட்சர்லாந்தின் அதிவேக வரம்பு மீறி மணிக்கு 200 கிமீ வேகத்தில் ஓட்டிக்கொண்டிருந்தனர்.
சுவிட்சர்லாந்தில் அதிவேகமாகச் சென்ற பிரித்தானியர்கள் கைது
ஒரு மாதத்திற்குப் பிறகு, அதே போன்ற சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. க்ராவுண்டனில் உள்ள போலீசார் இ ஸ்போர்ட்ஸ் கார்களில் வேகமாகச் சென்ற மற்ற இரண்டு பிரிட்டிஸைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மணிக்கு 80 கிமீ வேக வரம்பு உள்ள இடத்தில் மணிக்கு 153 கிமீ வேகத்தில் மலைப்பாதை வழியாக அவர்கள் ஓட்டிச்சென்றுள்ளனர். அவர்களின் கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் இப்போது (சுவிஸ்) நீதிமன்றத்தில் தண்டனைக்காக ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.