சுவிசின் லூசார்னில் பல மணிநேரம் பாரிய மின்தடை Lucerne நகரில் நள்ளிரவு 12.30 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டது. இதனால் நகரின் பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன.
மின்தடைக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை, என்று கூறப்பட்டுள்ளது.

Tribschen மாவட்டத்தில் முழுமையாக இருள் சூழ்ந்துள்ளது. Lucerne நகரிலும் வீடுகளில் மெழுகுவர்த்தி வெளிச்சமே காணப்படுகிறது.
மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை, என்று கூறப்பட்டுள்ளது. அதிகாலை 5.15 மணிக்குப் பின்னர் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
மூலம் -20min.