கார்களை உடைத்து கொள்ளையிட்ட இருவர் சென்ட்காலனில் கைது இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7, 2024)இ காலை 6:20 மணிக்குப் பிறகு, சென்ட்காலன் கன்டோனல் காவல்துறையின் ரோந்துப் படையினர் Bronschhofen AMP திராசவில் வைத்து இரண்டு சந்தேகத்திற்கிடமான வாகனக் கொள்ளையர்களைக் கைது செய்தனர்.
21 வயதான மொராக்கோ மற்றும் 17 வயதான அல்ஜீரியர் பல வாகனங்களை உடைத்ததாக சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
காலை 6 மணிக்கு முன்னதாக, இருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை கதவுகளை அழுத்தி திறக்க முயல்வதாக ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

காலை 6:20 மணிக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான நபர்களைத் தேடுவதற்காக அனுப்பப்பட்ட சென்ட்காலன் கன்டோனல் போலீஸ் ரோந்துப் படையினர் இருவரை தடுத்து நிறுத்தி கைது செய்ய முடிந்தது.
அவர்கள் குறித்த பகுதியில் பல வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து, பணம், சிகரெட்இ அழகுசாதனப் பொருட்கள், சன்கிளாஸ்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றைத் திருடியதாக தெரியவந்துள்ளது.
ஆதாரம்: St.Gallen Cantonal Police
Image source: St.Gallen Cantonal Police