ஆப்கானிஸ்தானுக்கு தொடர்ந்தும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்கப்படும் என சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. பெண்கள் பணியாற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மிக நெருக்கடியான தருணங்களில் மக்களுக்கு உதவிகள் தேவைப்படும் நிலையில் உதவிகள் வழங்கப்பட வேண்டுமென அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பிற்கான சுவிஸ் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

30 மில்லியன் சுவிஸ் பிராங்குகள் பெறுமதியான உதவிகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து மதிப்பீடு செய்து வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து பாகிஸ்தான் போன்ற நாடுகளுக் தப்பிச் சென்றுள்ள ஆண்கள் பெண்களுக்கு உதவும் நோக்கிலும் இந்த நிதி ஒதுக்கீடு பயன்படுத்தப்பட உள்ளது.
மேலும் சுவிற்சர்லாந்தின் உள்ளுர் செய்திகள் முதல் அத்தனை விடயங்களையும் அறிந்து கொள்ள SwissTamil24.Com எமது இணையத்தளத்தினை தினமும் பார்வையிடுங்கள்.

Source:- TamilInfo