மாங்குளத்தில் சுவிஸ் தமிழர் கட்டிவைக்கப்பட்டது ஏன்.? உண்மையில் நடந்தது என்ன.?
சுவிட்சர்லாந்தில் இலங்கைக்கு சென்ற தமிழர் ஒருவர் மாங்குளத்தில் உள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்ததாக கூறப்பட்டு அயலவர்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சம்பவம் கடந்த 1ம் திகதி இடம்பெற்றுள்ளது. எனினும் குறித்த சம்பவம் தொடபில் முன்னுக்கு பின் முரனான பல தகவல்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் பற்றி ஆரம்பத்தில் ஒரு சில இணையத்தளங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் குறித்த நபர் பெண்கள் வீட்டில் தனித்திருக்கையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயன்றதாகவும் பின்னர் அங்கிருந்த பெண்கள் கூக்குரல் எழுப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்களின் சத்தம்கேட்டு அயலவர்கள் ஓடிச்சென்று சந்தேக நபரை பிடித்து கட்டியுள்ளனர்.
அத்தோடு சந்தேக நபர் கொண்டுசென்ற பைகளில் கத்திகளும் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், சம்பவம் இடத்துக்கு வந்த பொலிஸார் சந்தேக நபரை பொறுப்பேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வீட்டில் ஆண்கள் யாரும் இருக்காத நிலையில் நிகழ்ந்த இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டு காயமடைந்த பெண்கள் மாங்குளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து சென்றவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது . மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர் அவரது மனைவியின் சகோதரி எனவும் மற்றையவர் மனைவியின் சகோதரியின் தாய் எனவும் தெரியவந்துள்ளது.

இதே வேளை குறித்த சம்பவம் தொடர்பில் இறுதியாக வெளியான தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர் 2 வருடங்களின் முன்னரும் இதே வீட்டுக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டு, பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் பின்னர், நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டு மனநல காரணங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்ததாகவுத் தெரிவிக்கப்படுகிறது.
சில வருடங்களின் முன்னர் வரை மாங்குளம் -பனிக்கன் குளத்தை சேர்ந்த பெண்ணொருவருடன் நட்பாக இருந்ததாகவும், அவருக்கு பெருமளவு பணம் அனுப்பியுள்ளதாகவும் கட்டிவைத்து நையப்புடைக்கப்பட்ட நபர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பெண் தற்போது, திருமண வாழ்க்கைக்குள் நுழைந்த பின்னர், சுவிஸ் நபர் தொந்தரவு கொடுப்பதே சர்ச்சையின் பின்னணியாக இருக்கலாம். 2 வருடங்களின் முன்னர் அந்த நபர்,இ குறிப்பிட்ட பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த போது அயலவர்களால் பிடித்து தாக்கப்பட்டு போலீசாரின் விசாரணையில் சிக்கியுள்ளார்.
இதே போன்று மீண்டும் அந்த நபர் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து அந்த பெண்ணையும், தாயாரையும் அவர் தாக்கியதாக முறையிடப்பட்டுள்ளது. உண்மையில் குறித்த சம்பவம் தொடர்பில், உறுதிப்படுத்தப்பட்ட சரியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. போலீசாரின் விசாரணையில், அவர் வழங்கிய வாக்குமூலம் என்ன என்பது தெரியவில்லை. ஆரம்பத்தில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில், தாக்கப்பட்ட பெண்கள் குறித்த நபருடைய மனைவியின் சகோதரி மற்றும் அவரது தாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மையாயின் இது ஒரு குடும்பப்பிரச்சினையாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
இதோடு பணக்கொடுக்கல் வாங்கல்களும் காரணமாக இருக்கலாம். மாறாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்கள் தாம் தாக்கப்பட்டதாகவே முறைப்பாடு செய்துள்ளதாக அறியமுடிகிறது. அவர்கள் பாலியல் தொந்தரவு மேற்கொண்டதாக முறைப்பாடு செய்தார்களா என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதே உண்மை. ஆனால் பல ஊடகங்களின் தலைப்பு செய்தியாக குறித்த நபர் அத்துமீறி வீட்டிற்கு நுழைந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகின்றது. இது பொய்யாக இருந்தால் உண்மையில் அந்த ஊடகத்தின் செய்திகள் அந்த பெண்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கலாம்.
மேலும் குறித்த நபரின் பைகளில் கத்திகள் கண்டெடுக்கப்பட்டுள்ளமை இவர் கொலை செய்யும் நோக்கில் சென்றாரா என்ன கேள்வியினையும் எழுப்புகின்றது. எனினும் குறித்த சம்பவத்தின் உண்மையான பின்னணி, குடும்ப பிரச்சினையா…? கொலை முயற்சியா..? பாலியல் தொந்தரவா..? பணக்கொடுக்கல்வாங்கலா என்ற என்ற பல கேள்விகளை நாம் கேட்கவேண்டியிருக்கிறது. இது தொடர்பிலான உண்மைகள் போலீசாரின் விசாரணைகளின் பின்னர் மாங்குளம் பொலிஸார் வெளியிட்டால், அல்லது குறித்த நபர் இது தொடர்பில் பகிரங்கமாக அறிவித்தால் மட்டுமே வெளிச்சத்துக்கு வரும் என்பது மட்டும் உண்மை.
பிந்திய தகவல் :-
குறித்த சம்பவம் தொடர்பில் எமது ஊடகம் சார்பில் நாம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் சுவிட்சர்லாந்தை சேர்ந்தவர் இல்லை என்பதும் அவர் கனடா நாட்டில் இருந்து சென்றவர் என்பதும் தெளிவாகியுள்ளது. மேலும் குறித்த பெண்ணுக்கு பல லட்சம் டாலர்களை இவர் அனுப்பியுள்ளதாகவும் பின்னர் அந்த பெண் திருமணம் முடிந்த பின் பணத்தை திருப்ப கேட்டும் கொடுக்காமையினால் கொலை செய்யும் நோக்கத்துடன் அங்கு சென்றதாகவும் விபரம் அறிந்த வட்டாரங்கள் மூலம் அறியக்கிடைக்கிறது.
@Theva Mathan