Image default
Swiss headline News

வீதியில் கிடந்த 20 ஆயிரம் சுவிஸ் பிராங்க் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதி

வீதியில் கிடந்த 20 ஆயிரம் சுவிஸ் பிராங்க் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதி

சுவிட்சர்லாந்தில் வீதியில் கிடந்த 20 ஆயிரம் சுவிஸ் பிராங்க் பணத்தை உரிமையாளரிடம் ஓர் தம்பதியினர் ஒப்படைத்துள்ளனர். வயோதிபர் ஒருவர் வங்கியில் பணம் பெற்று கொண்டு வீடு திரும்பும் போது அவற்றை தவற விட்டுள்ளார்.

தவறவிடப்பட்ட பணம் வீதியில் கிடப்பதனை கண்ட தம்பதியினர் அந்தப் பணத்தை உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் தென்பகுதி நகரமான மார்க்கிங் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீதியில்,சுவிஸ் பிராங்க்,பணத்தை

வீட்டுக்கு சென்று பார்த்த போத தனது பணம் காணாமல் போயிருந்ததை குறித்த வயோதிபர் கண்டுள்ளார். யாரோ பணத்தை களவாடி விட்டனர் என அஞ்சி வருத்தமடைந்துள்ளார்.

எனினும் குறித்த தம்பதியினர் பணப்பையில் இருந்த குறித்த நபரின் முகவரியை தெரிந்து கொண்டு அவரது வீட்டுக்கே சென்று பணத்தை ஒப்படைத்துள்ளனர்.
இவ்வாறு பெருந்தொகை பணத்தை மீள ஒப்படைத்தமைக்கு நன்றி பாராட்டும் வகையில் குறித்த முதியவர் அந்த தம்பதியினருக்கு 500 ஸ்விஸ் பிராங்க்களை சன்மானமாக வழங்கியுள்ளார்.

 

Source:- TamilSwiss

Advertisements

Related posts

சுவிட்சர்லாந்தில் விற்கப்படும் 1 CHF வீடு! நீங்களும் வாங்கலாம் ஆனால்…!!

admin

சுவிட்சர்லாந்தில் இடி மின்னலை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் ?

admin

சுவிட்சர்லாந்தில் மீன் உணவொன்றை சாப்பிட்ட நபர் உயிரிழப்பு

admin