பிரான்ஸில் ChatGPT தளத்தால் ஏற்பட்டுள்ள ஆபத்து! பிரான்ஸில் ChatGPT தளத்தை பயன்படுத்தி மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது குறித்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ChatGPT என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தளமாகும்.
ஒரு வார்த்தையை அதில் உள்ளிடுவது மூலம் அல்லது ஒரு கட்டளையை தெரிவிப்பதன் மூலம் தானியங்கி முறையில் ஒரு கடிதமோ அல்லது கட்டுரையோ உருவாக்கி உங்கள் முன் சமர்ப்பிக்கும்.
இந்த செயலியை பயன்படுத்தி lUniversité de Strasbourg பல்கலைக்கழக மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
20 மாணவர்கள் இவ்வாறு மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அவர்கள் மீண்டும் பரீட்சை எழுத பணிக்கப்பட்டுள்ளனர். இம்முறை ஆசிரியர்களுக்கு முன்பாக வைத்து பரீட்சை எழுத வேண்டும் என பணிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, மாணவர்களின் மூளையை மழுங்கடிக்கும் முகமாக குறித்த ChatGPT செயலி இயங்கி வருவதாக பல்வேறு கல்வியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.