Image default
sankt gallenSwiss Local News

சுவிஸ் சென்ட்காலன் மாநிலத்தில் கொள்ளைச்சம்பவங்களால் மக்கள் அச்சம்.!!

சென் கேலன்ஸ் கான்டனில் கொள்ளைச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சனிக்கிழமை சென் கேலன்ஸின் பாடி என்னும் பகுதியில் கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பண வைப்பு பெட்டகமொன்று உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. ஹீர்பிரக் என்னும் இடத்திலும் இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Steal

சென் கேலன் கான்டனில் சுமார் 12 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் பகுதிகளில் இவ்வாறான பல கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வழமைக்கு மாறான அடிப்படையில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisements

Related posts

சொலுத்தூர்ன் Egerkingen பகுதியில் ஏற்பட்ட பயங்கர விபத்து (படங்கள் இணைப்பு)

admin

சுவிட்சர்லாந்தின் லூசர்ன் பகுதியில் பாரிய தீ விபத்து.! (படங்கள் இணைப்பு)

admin

துர்காவ் மாகாணத்தில் பாதசாரி சுரங்கப்பாதையில் சடலம் மீட்பு

admin

Leave a Comment